நம்பி வேலைக்கு சேர்த்தால் இப்படியா செய்வது!!சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு சிறைத்தண்டனை!

நம்பி வேலைக்கு சேர்த்தால் இப்படியா செய்வது!!வெளிநாட்டு ஊழியருக்கு சிறைத்தண்டனை!!

சிங்கப்பூரில் முதலாளியின் வீட்டில் இருந்து நகைகளை திருடி அடகு வைத்த 50 வயது பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த அந்த பணிப்பெண் பத்தாண்டுகளுக்கு மேலாக தனது முதலாளியிடம் பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது.

அந்தப் பெண் முதலாளி வீட்டில் இருந்து மொத்தம் 59 நகைகளை திருடி அவற்றை $23,380 க்கு மேல் அடகு வைத்ததாக கூறப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் $10,000க்கும் அதிகமான பணத்தையும் திருடியுள்ளார்.

நகை மற்றும் பணம் காணாமல் போனதை அறிந்த முதலாளியும், அவரது மனைவியும் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

விசாரணையில் பணிப்பெண்ணின் குற்றம் நிரூபனமானது.

இதனையடுத்து அந்த பணிப்பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.