Singapore News in Tamil

சிங்கப்பூரில் லஞ்சம் நிலவரம் கட்டுக்குள் இருக்கிறதா?

சிங்கப்பூரில் லஞ்ச நிலவரம் குறித்து லஞ்ச ஊழல் புலனாய்வு பிரிவு கூறியுள்ளது.

லஞ்ச நிலவரம் தொடர்ந்து கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தது.

அதன் தொடர்பாக கடந்த ஆண்டில் சுமார் 230 புகார்கள் கிடைத்துள்ளது.

அதனை அதற்கும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 விழுக்காடு குறைவு.

கடந்த ஆண்டில் கிடைத்த புகார்களில் புலனாய்வுக்காக பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 83.

2021-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை அதே எண்ணிக்கை தான்.

கடந்த ஆண்டு லஞ்சம் தொடர்பாக வந்த ஒட்டுமொத்த எண்ணிக்கையில் அது 35 விழுக்காடு.

அந்த விகிதம் அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் சற்று குறைவாக இருந்தது.

அதிகபடியான புகார்கள் பதிவு செய்யப்பட்டதற்கு புலனாய்வு விசாரணைகளும்,வேவு நடவடிக்கைகளும் தான் காரணம் என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கூறியது.