Singapore news

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்!

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களின் ஊழியர்கள் மேலும் தொண்டு தொண்டு நிறுவனங்களில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“Project V ´´ எனப்படும் 6 மாத முன்னோடி திட்டத்தின்கீழ் உதவி தேவைப்படும் சமூகச் சேவை அமைப்புகளுடன் அல்லது தொண்டு நிறுவனங்களுடன் ஊழியர்கள் இணைக்கப்படுவார்கள்.

இந்த திட்டம் குடும்ப வாரத்தைக் குறிக்க Citi Singapore நிறுவனமும்,TOUCH சமூக சேவை அமைப்பும் நடத்திய நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுமார் 4,000 பேருக்கு பயன்தரக் கூடிய தொண்டு நடவடிக்கைகளில் இந்த திட்டத்தின் தொடக்கமாக Citi bank ஈடுபட உள்ளது.