தொடர் இயற்க்கை சீற்றதிர்க்கு உள்ளானது இந்தோனேசியா!!

தொடர் இயற்க்கை சீற்றதிர்க்கு உள்ளானது இந்தோனேசியா!!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மார்ச் 7ஆம் தேதி அன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 11 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பேரழிவு காரணமாக அப்பகுதியில் உள்ள 75,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

காணாமல் போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணியில் 150 பேர் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வது மிகவும் கடினமாக இருப்பதாக அவர்கள் கூறினர்.