இன்று இந்தோனேசிய தலைவர்கள் சிங்கப்பூர் வருகை!

சிங்கப்பூருக்கு இன்று இந்தோனேசியாவைச் சேர்ந்த தலைவர்கள் வருகை.அவர்கள் இன்று முதல் 10-ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருப்பர்.

அவர்கள் தோழமைக் கூட்டமைப்பு எனும் RISING Fellowship இரண்டாவது சந்திப்பில் கலந்துக் கொள்ள வந்து இருக்கின்றனர்.

இந்த சந்திப்பின் கருப்பொருள்,“ கிருமி பரவலுக்குப் பிந்திய உலகில் மீட்பையும் மறு நிர்மாணத்தையும் ஊக்குவித்தல்´´.

அவர்கள் துணைப் பிரதமர் Lawerence wong, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்,சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் ஆகியோரைச் சந்திப்பார்கள்.அவர்கள் பொருளியல் வளர்ச்சி,பொதுச் சுகாதாரம், பருவநிலை மாற்றம் குறித்த உரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பர்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சிகளைப் பார்வையிடுவர்.அதோடு மட்டுமல்லாமல் வர்த்தகர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.