Latest Sports News Online

வரும் திங்கட்கிழமை முதல் சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர் PCR கிருமித் தொற்று பரிசோதனை எடுக்கத் தேவையில்லை!

வரும் திங்கட்கிழமையிலிருந்து சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு செல்வோர் புறப்படுவதற்கு முன் கோவிட் PCR பரிசோதனைத் தேவையில்லை.

சீனா,தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான், ஹாங்காங் ஆகிய இடங்களில் இருந்து இந்தியாவிற்கு செல்வோர்க்கும் இது பொருந்தும்.

தற்போது உலகளவில் புதிதாக கிருமித் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இதனை இந்தியா சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டது.

இந்தியா செல்வோரில் இரண்டு விழுக்காட்டினருக்கு பரிசோதனை செய்யும் நடைமுறை தொடரும் என்றும் கூறியது.