சிங்கப்பூரில் தனது சொந்த தாயின் நகைகளை திருடி அடகு வைத்த இந்தியா வம்சாவளி!! பயணிகளிடமும் கைவரிசை!!

சிங்கப்பூரில் தனது சொந்த தாயின் நகைகளை திருடி அடகு வைத்த இந்தியா வம்சாவளி!! பயணிகளிடமும் கைவரிசை!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வரும் மைக்கேல் ராஜ் என்பவர் 2022 இல் பயணிகளிடம் ஆடம்பர கைக்கடிகாரங்களை திருடியதற்காகவும், தனது அம்மாவின் நகைகளைத் திருடி அடகு வைத்ததற்காகவும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டாக்சியில் தூங்கி கொண்டிருந்த 3 பயணிகளிடம் இருந்து 3 விலைமதிப்பான கைக்கடிகாரங்களைத் திருடியுள்ளார். அதன் மொத்த மதிப்பு சுமார் $200,000 வெள்ளி இருக்கும் என்று கூறப்படுகிறது.அதில் ஒரு கைக்கடிகாரம் மட்டுமே அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதே நபர் 2021 இல் தனது தாயிடம் $43,300 வெள்ளி மதிப்புள்ள 13 செட் நகைகளைத் திருடி அடகு வைத்துள்ளார்.

இந்த திருட்டு குற்றங்களுக்காக அவருக்கு 17 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் திருடிய குற்றத்திற்காக மைக்கேலுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், திருட்டுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

ஒவ்வொரு திருட்டு குற்றத்திற்கும் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.