இந்தியா vs ஆஸ்திரேலியா: மழை யாருக்கு சாதகமாக அமையும்?

இந்தியா vs ஆஸ்திரேலியா: மழை யாருக்கு சாதகமாக அமையும்?

ஐசிசி T20 உலக கோப்பை தொடரில் குரூப் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோப்பையை கைப்பற்றும் நோக்கத்துடன் விளையாடி வரும் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இன்று இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே போட்டியானது நடைபெற உள்ளது .

இந்நிலையில், இன்று நடைபெறும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதன் மூலம் ஏற்கனவே 4 புள்ளிகளை பெற்றுள்ள இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். அதே சமயம் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றாலும் 3 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.

அதேபோன்று ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் ஆட்டம் இழந்தால் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் இன்று என்ன நடக்கிறது யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் ரசிகர்கள் இந்திய அணி விளையாடுவதை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.