இந்தியாவின் தலைநகரத்தில் அதிகரித்த காற்று மாசுபாடு!புதிய நடவடிக்கை அறிமுகம்!!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்தார்.

நவம்பர் மாதம் 13ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த, அரசாங்கம் ஒற்றைப்படை- இரட்டைப்படை வாகனத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

இத்திட்டத்தின்படி, ஒற்றைப்படை எண் பலகைகள் கொண்ட வாகனங்கள் ஒற்றைப்படை தேதிகளில் அனுமதிக்கப்படும்.

இரட்டைப்படை எண் பலகைகள் கொண்ட வாகனங்கள் இரட்டைப்படை தேதிகளில் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசுபாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்தார்.