SIA,Scoot நிறுவனங்களின் விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்வு!!

SIA,Scoot நிறுவனங்களின் விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்வு!!

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் Scoot ஆகிய இரு விமான நிறுவனங்களின் பயணிகள் எண்ணிக்கை 9.6 மில்லியன் எட்டியுள்ளது.

இதே காலத்துடன் கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்த்தால் அது 13.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

எனினும், கிருமி பரவல் காலக்கட்டத்திற்கு முந்தைய எண்ணிக்கையை இன்னும் தொடவில்லை.

2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த இரு விமான நிறுவனங்களின் சேவையில் சுமார் 3.38 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர்.

கடந்த மாதம் 3.19 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.

ஜூன் மாத பள்ளி விடுமுறை காரணங்களால் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்ததாக கூறப்படுகிறது.