சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல்……

சிங்கப்பூரில் உள்ள உணவகங்கள் சிங்கப்பூரில் நீண்டகாலம் தங்க அனுமதி வைத்திருப்பவர்களை இனி வேலைக்கு அமர்த்தலாம். அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்வதற்கான அனுமதி வைத்திருக்க வேண்டும்.

இது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.அவர்கள் உணவகங்களில் உதவியாளராக வேலை செய்யலாம்.

தற்போது சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் மட்டுமே தேசிய சுற்றுப்புற அமைப்பு நிர்வகிக்கும் உணவகங்களை நடத்துவது அல்லது உதவியாளராக பணியாற்ற முடியும்.

இந்த தகவலை நீடித்த நிலைத்தன்மை,சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் கோ போ கூன் அறிவித்தார்.

வேலை கொள்கைகளை சற்று தளர்த்தும் போது உணவங்காடிகாரர்களுக்கு தேர்வு செய்வதற்கு கூடுதல் விருப்பங்கள் இருக்கும் என்று டாக்டர் கோ கூறினார்.