பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் தீக்கு இரையான இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர்!!

பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் தீக்கு இரையான இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர்!!

பொன்னமராவதி, பிப்.16- பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர் எரிந்து சேதம்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா ஆர். பாலக்குறிச்சியில் வசித்து வரும் சின்னையா மகன் பழனிச்சாமி. விவசாயியான இவர் இவரது நிலத்தில் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட வைக்கோலை தனது வயலில் அடுக்கி வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொன்னமராவதி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர்.