ஊழியர்களை உண்மைக்கு புறம்பாக நடக்கச் சொன்ன முதலாளிக்குச் சிறை…!!!

ஊழியர்களை உண்மைக்கு புறம்பாக நடக்கச் சொன்ன முதலாளிக்குச் சிறை...!!!

சிங்கப்பூர்: தீ பாதுகாப்பு மற்றும் தடுப்பு (SG) நிறுவனத்தின் முதலாளி கெல்வின் டான் யாவ்ஷேங் நீதிக்கு எதிராக செயல்பட்டதாக அவருக்கு ஒரு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த 43 வயதான டான் மீதும் இதே போன்று வேறொரு குற்றச்சாட்டும் உள்ளது.

தீயை அணைக்கும் கருவிகளை விற்பனை செய்ய டானின் ஊழியர்கள் சில தவறான யுக்திகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன.

அவர்கள் சிங்கப்பூர் பொது அமைப்புகள் மற்றும் சமூக மன்றங்களால் நியமிக்கப்பட்ட கட்சிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வீடு வீடாகச் சென்று தீ அணைக்கும் கருவிகளை விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

தீயணைக்கும் கருவியின் விலை 17 வெள்ளி 90 காசுகள் என பொய் கூறியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அந்தச் சாதனத்தின் உண்மையான விலை 179 வெள்ளி ஆகும்.

குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கூறி பிறகு 179 வெள்ளி வசூலித்ததாக வாடிக்கையாளர்கள் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர்.

பின்னர் இது குறித்து டானிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் போலீசார் டானிடம் வேலை செய்த ஊழியர்களை விசாரணைக்கு அழைத்தனர்.

டான் குற்றத்தை எப்படி மறைக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே ஊழியர்களிடம் கூறியது விசாரணையில் கண்டறியப்பட்டது.

நீதியைத் தடுத்த குற்றத்திற்காக டானுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Follow us on : click here ⬇️