கெரிட் புயலின் தாக்கம்:நிலவி வரும் மோசமான வானிலை!!மூன்று பேர் பலி!!

வடக்கு இங்கிலாந்தில் கெரிட் புயல் காரணமாக கனமழை மற்றும் கடுமையான பனி பெய்து வருகிறது.அங்கு நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக கார் ஒன்று Esk ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் டிசம்பர் 28ஆம் தேதி அன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவுடன் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பிற்பகல் 3 மணி அளவில் கார் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. காருக்குள் இருந்த மூவரும் இறந்துவிட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரில் இருந்தவர்களுக்கு உதவ முயன்ற மற்றொரு நபர் பத்திரமாக மீட்கப்பட்டார்.அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.