டெல்லியில் உள்ள IAS பயிற்சி நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளம்!! 7 பேர் கைது…!

டெல்லியில் உள்ள IAS பயிற்சி நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளம்!! 7 பேர் கைது...!

இந்திய தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திய நிர்வாக சேவை (IAS) பயிற்சி மையத்தில் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் 27ஆம் தேதி (ஜூலை 2024) பயிற்சி மையம் அருகே கால்வாய் உடைந்து கல்லூரியின் தரை தளத்தில் வெள்ளம் புகுந்தது. இதில் சிக்கிய 3 மாணவர்கள் வெளியே வர முடியாமல் இறந்தனர்.

இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் கோபத்தையும் ஏற்படுத்தியது.

பயிற்சி நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும் கல்லூரி மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிற்சி மையத்தில் முறையான பாதுகாப்பு இல்லாததால் மாணவர்கள் இறந்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் இளநிலை பொறியியலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உதவி பொறியியலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.