“நான் எனது வடுவை பதக்கமாக அணிகிறேன்”… பெருமையின் பூரிப்பில் பிரபல சீரியல் நடிகை..

"நான் எனது வடுவை பதக்கமாக அணிகிறேன்"... பெருமையின் பூரிப்பில் பிரபல சீரியல் நடிகை..

சென்னை: தமிழ் திரையுலகில் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரீதேவி அசோக். பின்பு சின்னத்திரை நடிகையாக வலம் வந்த இவர் வாணி ராணி, கல்யாண பரிசு ,ராஜா ராணி, தங்கம் ,இளவரசி உள்ளிட்ட நெடுந்தொடரில் நடித்து வந்தார். இவரது நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.விஜய் டிவியில் மோதலும் காதலும், பொன்னி உள்ளிட்ட இரண்டு தொடர்களில் நடித்து வந்தார்.இரண்டு தொடர்களில் கர்ப்பமாக இருப்பது போன்று நடித்து வந்தார்.

தான் கர்ப்பம் அடைந்த முதல் நாளிலிருந்து குழந்தை பிறக்கப் போகும் முதல் வாரம் வரை தொடர்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து நடித்த இவர் சீரியலிருந்து தற்போது விலகினார். இந்நிலையில் அவருக்கு மே 23ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள bloomlife தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

தான் குழந்தை பெற்ற அனுபவத்தை தனது யுடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். அதில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை மற்றும் மருத்துவர் குறித்து பகிர்ந்துள்ளார். இந்நிலையில் 2 வது பெண் குழந்தை பெற்றெடுத்த மகிழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி தன் ஃபேஸ்புக் பக்கத்தில்’“பெண் குழந்தை… நான் என் வடுவை பதக்கமாக அணிகிறேன். இது தோல்வி அடைந்ததற்கான அறிகுறி அல்ல.நான் வெட்கப்படவில்லை பெருமை அடைகிறேன். என் உடல் என்னை வீழ்த்தவில்லை” என்று குழந்தையுடன் தன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.