சுறாவால் தாக்கப்பட்ட இளம்பெண் உயிர் தப்பியது எப்படி!!

சுறாவால் தாக்கப்பட்ட இளம்பெண் உயிர் தப்பியது எப்படி!!

சிட்னி துறைமுகத்தில் நீந்திக் கொண்டிருந்த 29 வயதான பெண்ணை சுறா தாக்கியது.

இச்சம்பவம் ஜனவரி 29ஆம் தேதி அன்று எலிசபெத் விரிகுடாவில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த பெண்ணின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அருகில் இருந்த கால்நடை மருத்துவர் அந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்தார்.

பிறகு அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த துறைமுகத்தில் சுறாக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டாலும், அவை மனிதர்களை தாக்குவது அரிது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.