தேசிய பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட கௌரவ விருது..

தேசிய பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட கௌரவ விருது..

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இரண்டு நபர்களுக்கு கௌரவப் பட்டங்கள் வழங்கி கௌரவித்துள்ளது.

அந்தந்த துறைகளில் அவர்களின் முன்மாதிரியான தலைமைத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டது.

பட்டம் பெற்றவர்களில் ஒருவர் சிங்கப்பூரின் 4வது தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன்.

2012 ஆம் ஆண்டிலிருந்து குற்றவியல் நடைமுறைகளில் அவர் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளதாக பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

மிக உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்ற மற்றொரு நபர், நகர்ப்புற புதுப்பித்தல் ஆணையத்தின் தலைவர் பீட்டர் ஹோ ஆவார்.

பல்கலைக்கழகம் அவரை சிங்கப்பூரின் உன்னத அரசு ஊழியர்களில் ஒருவராகப் பாராட்டியது,மேலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியில் சேவையாற்றி வருகிறார்.

ஓய்வுக்குப் பிறகு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக கடந்த ஆண்டு வரை பணியாற்றினார்.

சிங்கப்பூர் மற்றும் உலகளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பல்கலைக்கழகம் கெளரவ பட்டத்தை வழங்குகிறது.