மலேசியாவில் கனமழை...!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி...!!!

மலேசியாவின் ஜொகூர் பாருவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சாலையை கடக்க முடியவில்லை.
போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிக கனமழையால் அப்பகுகுதிகளில் வெள்ளம் முழங்கால் அளவுக்கு இருந்தது.
வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் மற்றும் மழை நீர் தேங்கிய சாலைகளைக் காட்டும் புகைப்படங்களை இணையவாசிகள் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களில் ஜொகூர் பாருவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும்.
வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான சரியான வடிகால் அமைப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால் குடியிருப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan