கிழக்கு காங்கோவில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை!!

கிழக்கு காங்கோவின் புகாவுவில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

இதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.மேலும் இப்பகுதி, மோசமான கட்டமைப்பு மற்றும் வறுமை காரணமாக தீவிர வானிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறது என்றும் கூறினர்.