புரட்டிப்போட்ட புயலுக்குபின் வெளுத்து வாங்கிய கனமழை!! 9 பேர் பலி!!

டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் கிழக்கு ஆஸ்திரேலியாவில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்தது.இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 86,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர்.

புயல் காரணமாக பெய்த கனமழையைத் தொடர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.பலத்த காற்று வீசியதில் வீட்டின் கூரைகள் பறந்து சென்றன மற்றும் சாலைகளில் மரங்கள் விழுந்து கிடந்தன.

மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சில பகுதிகளில் சிறிய வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.