பணியாளர்களுடன் நாடு திரும்பிய Halfnia Nile கப்பல்!!

பணியாளர்களுடன் நாடு திரும்பிய Halfnia Nile கப்பல்!!

ஹஃப்னியா நைல் எண்ணெய்க் கப்பல் 22 பணியாளர்களுடன் பத்திரமாக நாடு திரும்பியது…
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய்க் கப்பலான ஹஃப்னியா நைல் 22 பணியாளர்களுடன் பத்திரமாக நாடு திரும்பியுள்ளது.

இந்த கப்பல் ஜூலை 19 அன்று மத்திய ஆப்பிரிக்காவின்
சோதோமே பிரின்சிபே தீவில் உள்ள பெட்ரா பிராங்கா அருகே சீரிஸ் ஒன் கப்பலுடன் மோதியது.

ஹஃப்னியா நைல் கப்பல் மோதியதில் இரண்டு கப்பலிலும் தீ பற்றியதாக கூறப்பட்டது. மேலும் கப்பல் ஆழ்கடலில் மூழ்காமல் இருப்பதற்காக இழுவை படகு கொண்டு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கப்பலில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.கப்பல் நிறுவனம் பணியாளர்களுக்கு தங்குமிட வசதியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. அவர்கள் மருத்துவ மற்றும் மனநல ஆலோசனைகளையும் பெறுகிறார்கள்.

கப்பல் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்ந்து பேசி வருவதாக நிறுவனம் கூறியது.

சரக்கு அல்லது எரிபொருள் கசிவு குறித்து
நிறுவனம் எந்த தகவலும் இல்லை என்று கூறியது.

இச்சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக கூறியது.