சமூக சேவை ஊழியர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்த வழங்கப்பட்ட மானியம்…!!!

சமூக சேவை ஊழியர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்த வழங்கப்பட்ட மானியம்...!!!

மூப்படையும் சமூகத்தினர் அதிகரிப்பதாலும், மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி தேடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் பணிச்சுமை அதிகரித்துள்ளது.

இதனால் சமூகப் பணியாளர்கள் பரவலான சோர்வு நிலையை அனுபவித்து வருவதாகக் கூறுகின்றனர்.

அவர்களும் தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். சிலர் இதற்காக சமூக முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர்.

சமூக சேவைத் துறையில் பணிபுரிபவர்கள் தேவைப்படுபவர்களுக்கு உதவவும் அவர்களின் சுமையைக் குறைக்கவும் கடுமையாக உழைக்கிறார்கள்.

இதனால் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய சமூகப் பணியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளில் சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு முயற்சியை மெலிசா லெர்-லிம் தொடங்கியுள்ளார்.

சமீபத்தில், ஏராளமான இளைஞர்கள் மனநலப் பிரச்சினைகளால் அவதிப்படுவதை அவர் கண்டுள்ளார்.

மேலும் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

சுகாதார சேவைகளில் தற்போதைய நெருக்கடியைத் தடுக்க ஜெனீவ் வோங் ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளார்.

இது நோயாளிகளுக்கு சரியான தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவைப் பெற உதவுகிறது.

சமூக மருத்துவமனையில், லூயிசா பீலிக் என்பவர் டிமென்ஷியா நோயாளிகளுக்கு உதவும் சிகிச்சை மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவை பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் உதவுகின்றன.

விருது பெற்ற அனைவரும் அவர்களின் திறன்களை மேம்படுத்த ரொக்கப் பரிசுகளும் மானியங்களும் வழங்கப்பட்டன.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan