சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு ஓர் இன்பச்செய்தி!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு ஓர் இன்பச்செய்தி!!

சுமார் 8 மாத போனஸ் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பெறவிருப்பதாக தகவல் வந்துள்ளது.

இது நிறுவனத்தின் வரலாற்றில் மிக உயர்ந்த போனஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சுமார் 6.65 மாத போனஸ் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Goh Choo Pong நடத்திய சந்திப்பின் போது திரையில் வெளியிடப்பட்ட படங்களில் ஊழியர்களுக்கு 7.94 மாத போனஸ் கொடுக்கப்படும் என்ற தகவல் இருந்ததாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாதனை வருவாயைத் தொட்டுள்ளது.

இதனையடுத்து இந்த அறிவிப்பானது வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு அதன் வருவாய் 2.16 பில்லியன் வெள்ளியாக இருந்தது. இவ்வாண்டு அது 2.68 பில்லியன் வெள்ளியைத் தொட்டுள்ளது.