Latest Tamil News Online

சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு ஆய்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு!

சிங்கப்பூரில் 8 மில்லியன் வெள்ளி சுகாதாரப் பராமரிப்பு ஆய்வு திட்டங்களுக்காக ஒதுக்கப்படவிருக்கிறது. இது நோயாளிகளுக்கு ஏற்றத் தீர்வுகளைப் பெறுவதற்கு துணை புரியும். அவர்களுக்கு உகந்த வகையில் விரிவான நடைமுறை ஏற்ற தீர்வுகளைப் போல் துணைப் புரியும்.

அதன் தொடர்பிலான பங்காளத்துவத்தில் நேற்று A*STAR எனும் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு அமைப்பும்,SingHealth சுகாதார பராமரிப்பு குழுமமும் கையெழுத்திட்டது.

அதில் மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.

மூன்று அம்சங்கள்,

▪️ சுகாதார சேவைகள்,

▪️ தரவு அறிவியல்- செயற்கை நுண்ணறிவு,

▪️ மருத்துவ தொழில்நுட்பம்.

ஆய்வாளர்கள், மருத்துவ நிபுணர்கள், தொழில்துறை பங்காளிகள் ஆகியோர் சந்தித்துக் கொள்வதற்கும், உரையாடுவதற்கும் அலுவலகம் உகந்த இடமாக இருக்கும்.

மனிதர்களிடம் ஆய்வு முடிவுகளை விரைவாக சோதிக்கப்பட முடியும்.