பறவை கடைக்குள் புகுந்து திருடிய நான்கு பேர் கைது…!!!

பறவை கடைக்குள் புகுந்து திருடிய நான்கு பேர் கைது...!!!

சிங்கப்பூர்:சாங்கி சாலையில் உள்ள பறவைகள் விற்கும் கடையில் புகுந்து திருடியதாக 4 பேர் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு புதன்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடையில் சுமார் $7,200 மதிப்புள்ள பறவைகள், கூண்டுகள் மற்றும் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளன.

இந்தத் திருட்டு சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

அதில் 27 வயதுடைய ஒருவரும் 14 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட மூவரும் அடங்குவர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் நால்வரும் பிடிபட்டனர்.

அவர்களிடமிருந்து சுமார் $7,110 மதிப்புள்ள பறவைகள் மற்றும் கூண்டுகள் மீட்கப்பட்டன.

இதனால் இன்று(செப்டம்பர் 21) 27 வயதான நபர் மற்றும் 17 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.

மேலும் இது தொடர்பாக 14 வயது சிறுவன் மீதான விசாரணைகள் தொடர்கின்றது.

 

Follow us on : click here ⬇️