சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வெளிநாட்டவர்களுக்கு பிரம்படி!!

நவம்பர் 20ஆம் தேதி அன்று சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு இந்தோனேசியர்கள் கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் 36 மற்றும் 33 வயது உடையவர்கள் ஆவர்.

அவர்கள் இருவரும் பயணம் செய்த ஐந்து மீட்டர் நீளம் உள்ள படகை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது மூன்று பிரம்படிகளும் கொடுக்கப்படும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.