சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் மரணம்!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் மரணம்!!

சிங்கப்பூரின் பெடோக்கில் உள்ள ஒரு உணவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த துயரச் சம்பவம் மார்ச் 16ஆம் தேதியன்று நடந்தது.

பாதிக்கப்பட்டவர் 23 வயதுடையவர் என்பதும்,சீன நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த நபர் உணவு உற்பத்தி செய்யும் இயந்திரத்தின் பாகங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

சக ஊழியர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு இயந்திரத்தை நிறுத்தியதால் அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து காலை 8.25 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட அந்த நபரை சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.

இதனை அடுத்து தொழிற்சாலையின் செயல்பாடுகளை நிறுத்துமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.