சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக…….

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக.......

சிங்கப்பூரில் ஊழியர்கள் பணிபுரியும் மணி நேரத்தை விட அவர்களின் வேலையின் செயல்திறனை கொண்டு மதிப்பிடுமாறு முதலாளிகளை வலியுறுத்திப்படுகிறது.அதனை ஊழியரணி வலியுறுத்தியது.

இவ்வாறு செய்தால் நீக்குப்போக்கு வேலை ஏற்பாடுகள் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியது.

வரும் டிசம்பர் மாதத்திலிருந்து புதிய முத்தரப்பு வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரும்.

அனைத்து முதலாளிகளும் இந்த நீக்குப்போக்கு வேலை ஏற்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

இந்த வேலை ஏற்பாடுகள் வெற்றியடைய வேண்டும், வேலையிடத்தில் நம்பிக்கை கலாச்சாரம் மேம்பட வேண்டும்.

இந்த ஏற்பாடுகள் நிறுவனத்திற்கும் பயனளிப்பதாக அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டது.

நிறுவனங்களின் மனிதவள நடைமுறைகளை மேம்படுத்த உதவிகள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இத்தகைய உதவி,நீக்குப்போக்கு வேலை ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய உதவும் என்றும் தெரிவித்தது.