கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்!! 11 பேர் பலியான சோகம்!!

கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்!! 11 பேர் பலியான சோகம்!!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக ஜனவரி 14-ஆம் தேதியன்று கார் ஒன்று ஆற்றில் விழுந்தது.

இதில் ஒரு பெண்ணை காணவில்லை என்றும், அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழை வெள்ளத்தால் பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.

மேலும் வீடுகள் மற்றும் மரங்கள் பல சேதம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாநிலத்தின் எட்டு நகரங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களை பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.