விமான புறப்பட தாமதம்!! சோகத்தில் இருந்த விமானி!! பயணி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

விமான புறப்பட தாமதம்!! சோகத்தில் இருந்த விமானி!! பயணி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

சிங்கப்பூர்: விமானியை உற்சாகப்படுத்துவதற்காக பயணி ஒருவர் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமானது சிங்கப்பூரிலிருந்து பேங்காங்கிற்கு புறப்பட ஆயத்தமானது. அப்போது ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் விமானத்தின் புறப்பாடு சற்று தாமதமானது.

காத்திருக்கும் நேரத்தில் பயணி ஒருவர் விமானியின் முகத்தை வரைந்து அதற்கு வண்ணம் தீட்டினார். விமானியின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ஓவியத்தை அவருக்கு பரிசளிக்க விரும்பினார்.

இதனை உடன் இருந்த பயணி வீடியோவாக எடுத்து டிக் டாக்கில் பகிர்ந்துள்ளார். இந்த காணொளியை 4 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர்.

விமானம் தரை இறங்கியவுடன் விமானிக்கு தான் வரைந்த ஓவியத்தை பரிசாக அளித்தார் அந்தப் பயணி. இதைக் கண்ட விமானி இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

சுற்றி இருந்த விமான பணியாளர்கள் “எங்களை வரைய வில்லையா”, என்று வேடிக்கையாக கேலியாக கேட்டனர்.