சிப்பந்தியை வார்த்தைகளால் காயப்படுத்திய பயணியால் தாமதமான விமானம்…!!!

சிப்பந்தியை வார்த்தைகளால் காயப்படுத்திய பயணியால் தாமதமான விமானம்...!!!

சிங்கப்பூர்:ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் விமானச் சிப்பந்தியை வார்த்தைகளால் துன்புறுத்தியதால் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் எஸ்கியூ897, ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து செப்டம்பர் 10 அன்று புறப்பட திட்டமிடப்பட்டது.

71 வயது முதியவர் ஒருவர் விமானம் புறப்படுவதற்கு முன் மதுபானம் கொடுக்குமாறு விமானச் சிப்பந்தியிடம் கேட்டிருக்கிறார்.

முதியவரின் கோரிக்கை மறுக்கப்பட்ட காரணத்தால் அவர் சிப்பந்தியை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் காரணமாக இரவு 8.25 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் காலை 11.38 மணிக்கு புறப்பட்டுள்ளது.

அந்த நபர் கைது செய்யப்படவில்லை என்று ஹாங்காங் உள்ளூர் செய்தி நிறுவனம் HK01 தெரிவித்துள்ளது.