தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து!!

ஜனவரி 17ஆம் தேதி அன்று மதியம் 3 மணியளவில் மத்திய தாய்லாந்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் இந்த வெடி விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.

இந்த ஆலை அரசு உரிமம் பெற்றது என்றும், சராசரியாக 20 முதல் 30 பணியாளர்கள் வேலை செய்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த வெடிவிபத்தால் ஆலையின் சுற்றுவட்டாரப் பகுதிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அவர்கள் கூறினர்.

இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.