Latest Singapore News

தெம்பனிஸ் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ!

இன்று காலை தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றியது.

தெம்பனிஸ் அவென்யூ 5, பிளோக் 147- இலிருந்து 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.அதனை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் Facebook பக்கத்தில் பதிவிட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு இன்று காலை சுமார் 8.10 மணிக்கு தகவல் கிடைத்தாக கூறியது.

முதற்கட்ட விசாரணையில்,அடுக்குமாடி குடியிருப்பில் 2-ஆம் தளத்தில் உள்ள வீட்டின் படுக்கை அறையில் தீ பற்றி கொண்டதாக தெரியவந்தது.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றதும் தீயை அணைத்தனர்.

தீயின் புகையைச் சுவாசித்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களில் சிலர் தீயை அணைக்க முயற்சி செய்ததாக சொல்லப்பட்டது.