ரிவர்வேல் லிங் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (அக்டோபர் 6) இரவு ரிவர்வேல் லிங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை முகநூலில் பதிவிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இரவு 8.35 மணியளவில் தகவல் கிடைத்ததாக குடிமை தற்காப்புப்படை தெரிவித்துள்ளது.

கூட்டுறவு இல்லத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் நீர்ஜெட் பம்புகளை பயன்படுத்தி தீயை அணைத்ததாக கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் தங்கியிருந்த 100 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.