பொன்னமராவதி அருகே தீ விபத்து!! விவசாயின் உழைப்பை நாசமாக்கிய தீ!!

பொன்னமராவதி அருகே தீ விபத்து!! விவசாயின் உழைப்பை நாசமாக்கிய தீ!!

பொன்னமராவதி,ஜன.30- பொன்னமராவதி அருகே தீ விபத்தில் மூன்று லட்சத்திற்கும் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்- உரிய இழப்பீடு வழங்கி விவசாயின் வாழ்வாதாரத்தை காக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த வருடம் நான்கு ஏக்கருக்கு அதிகமாக நெல் சாகுபடி செய்த நிலையில் அறுவடை செய்த நெல் மற்றும் வைக்கோலை விற்பனைக்கு வைத்திருந்தார். கணேசன் மாலை விவசாய பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில் அவரது வைக்கோல் போரானது திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

அதற்குள் கணேசன் வைத்திருந்த வைக்கோல் போரில் தீ மளமளவென பரவியது. இதனையடுத்து பொன்னமராவதி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொன்னமராவதி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அதற்குள் மூன்று லட்சம் மதிப்பிலான கணேசன் அவர்களது உடைமைகள் மற்றும் நெல் மூட்டைகள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் சாதனங்கள் தீயில் இருந்து நாசமானது.

தீ விபத்தில் உடைமைகளை இழந்த விவசாயிக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயி கணேசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்..