சுங்கை காடுட் பகுதியில் தீ விபத்து!! யாருக்கும் காயம் ஏற்படவில்லை!!

சிங்கப்பூரின் சுங்கை காடுட் லூப் பகுதியில் அக்டோபர் 12-ஆம் தேதி நேற்றிரவு தீச்சம்பவம் ஏற்பட்டது.54 சுங்கை காடுட் ரிங் ரோடு தொழிற்சாலைக்கு வெளியே இயந்திர பாகங்கள் வைக்கப்பட்டிருந்தது.

இயந்திர பாகங்கள் தீப்பற்றியது.இதனால் அங்கிருந்து தாங்களாகவே 20 பேர் வெளியேறினர்.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு இரவு சுமார் 10.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக கூறியது.தீயை அணைப்பதற்காக 3 தீயணைப்பு குழாய்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இச்சம்பவத்தால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.