தனது மகனை குடை ,பிரம்பால் அடித்து காயப்படுத்திய தந்தை!!நீதிமன்றத்தில் தீர்ப்பு!!

தனது மகனை குடை ,பிரம்பால் அடித்து காயப்படுத்திய தந்தை!!நீதிமன்றத்தில் தீர்ப்பு!!

சிங்கப்பூரில் 9 வயது மகனை இரண்டு குடைகள் மற்றும் பிரம்பால் அடித்து காயப்படுத்திய 45 வயது தந்தைக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இச்சம்பவம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரை தடுக்க முயன்ற அவரது மனைவியையும் காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தனது மகன் பொய் சொல்வதாக சந்தேகப்பட்ட அவர், அதனை கண்டிக்கும் பொருட்டு அவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார்.

மகன் மற்றும் மனைவியின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

அதனை அடுத்து காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர்.

காயம் அடைந்த சிறுவனும், தாயும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.