ஒரே சிகிச்சையில் 23 பற்களை பிடுங்கிய தந்தை உயிரிழப்பு..!!

ஒரே சிகிச்சையில் 23 பற்களை பிடுங்கிய தந்தை உயிரிழப்பு..!!

சீனாவைச் சேர்ந்த ஒருவர் பல் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 13 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

ஹுவாங் என்ற நபருக்கு ஒரே நாளில் 23 பற்கள் பிடுங்கப்பட்டன.

இதையடுத்து அவருக்கு 12 செயற்கை பற்கள் பொருத்தப்பட்டன.

அனைத்தும் ஒரே சிகிச்சையில் மேற்கொள்ளப்பட்டதின் விளைவாக அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஹுவாங்கின் மகள் ஷு இது குறித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 14 அன்று தனது தந்தைக்கு பல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ஷு கூறினார்.

அதன் பிறகு அவரது தந்தை கடுமையான வலியால் அவதிப்பட்டதாகவும் ஆகஸ்ட் 28ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.

சிகிச்சையை மேற்கொண்ட பல் மருத்துவர் ஹுவாங்கின் அனுமதி பெற்று சிகிச்சையை மேற்கொண்டதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சிகிச்சை செய்த பல் மருத்துவருக்கு 5 வருட அனுபவம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த நெட்டிசன்கள் பலர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

Follow us on : click here ⬇️