வேகமாக பரவும் காட்டுத் தீ..!!! திணறும் தீயணைப்பு வீரர்கள்..!!

வேகமாக பரவும் காட்டுத் தீ..!!! திணறும் தீயணைப்பு வீரர்கள்..!!

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் அருகே காட்டுத் தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏதென்ஸ் அருகே உள்ள எட்டு கிராமங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டன.

அதனை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

காட்டுத் தீ 25 மீட்டர் உயரம் வரை பரவியிருந்த நிலையில்,அது சுமார் 30 கிலோமீட்டர் வரை பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் காட்டுத்தீ ஏதென்ஸை நோக்கி வேகமாக பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காட்டுத்தீயால் 8 பேர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.

தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க கடும் முயற்சி செய்தும் தீயை அணைக்க முடியவில்லை என தீயணைப்புத்துறை கூறியது.

இதனால் தீயை அணைக்கும் பணியில் சுமார் 700 தீயணைப்பு வீரர்கள், 180 வாகனங்கள் மற்றும் 30 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.