என்ஜினில் ஏற்பட்ட தீ விபத்து!! பாதிக்கப்பட்ட 6 ரயில் சேவை!!

என்ஜினில் ஏற்பட்ட தீ விபத்து!! பாதிக்கப்பட்ட 6 ரயில் சேவை!!

சிங்கப்பூரில் மே 24-ஆம் தேதி(இன்று) பராமரிப்பு பணிகள் நடைபெற்ற போது எஞ்சின் தீப்பிடித்தது. அதனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.

சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையை சேர்ந்த தீயணைப்பாளர்களால் அணைக்கப்பட்டது. அதன் வெப்பம் குறையும் வரை எஞ்சினை இயக்க முடியாது. அதனால் பாதைகள் மூடப்பட்டதாக SBST தெரிவித்தது.


சைனா டவுன் மற்றும் பெடோக் நார்த் ஸ்டேஷன்களுக்கு இடையே பஸ் சேவைகள் செயல்பட்டது.

பயணிகளுக்கு இலவசமாக சேவைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தீ விபத்து சம்பவம் மேட்டார் ஸ்டேஷனில் பராமரிப்பு வேலைச் செய்து கொண்டிருந்த போது என்ஜினில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தால் ஒரு ஊழியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தது.


இன்று காலை சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.