Singapore News in Tamil

சிங்கப்பூர் Turf Club – இல் பணி புரியும் ஊழியர்கள் படிப்படியாக பணி நீக்கம் செய்யப்படுவர்!

சிங்கப்பூர் Turf Club மூடப்படும் அறிவிப்பை ஜூன் 5-ஆம் தேதி காலை ஊழியர்களுக்கு தெரிந்ததாக சிங்கப்பூர் Turf Club – இன் குழு தலைவர் ஐரின் லிம் கூறினார்.

மறு சீரமைப்புக்காக சிங்கப்பூர் Turf club அமைந்துள்ள இடத்தை அரசாங்கத்திடம் 2027-ஆம் ஆண்டுக்குள் ஒப்படைக்கப்படும்.

அங்கு பணி புரியும் 350 ஊழியர்களைப் படிப்படியாக வேலையிலிருந்து நீக்கப்படுவர்.

சுமார் 16 மாதங்களில் அதன் முதற்கட்டம் இடம்பெறும்.

அடுத்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி அதன் இறுதி குதிரைப் பந்தயம் நடைபெறும்.

அதன்பின், சுமார் 700 குதிரைகள் ஏற்றுமதி செய்யப்படும்.

“பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வேறு வேலைகளைத் தேடி கொள்ளவும்.அவர்களுக்கு போதிய அவகாசம் அளிக்கப்படும்´´, என்று சிங்கப்பூர் Turf Club -இன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதியளித்தார்.