சிங்கப்பூரில் திறன் பயிற்சி திட்டங்களால் பயனடைந்த ஊழியர்கள்!!

சிங்கப்பூரில் திறன் பயிற்சி திட்டங்களால் பயனடைந்த ஊழியர்கள்!!

சிங்கப்பூரில் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் மூலம் சுமார் 2,00,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதன் திறன் பயிற்சி திட்டங்களால் பயனுடைந்துள்ளதாக தெரிவித்தது.

இதனை மே தினச் செய்தியில் தொழிற்சங்க காங்கிரஸ் தெரிவித்தது.

பயனடைந்தவர்களில் பலர் சம்பள உயர்வை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஊழியர்களுக்கு தொழில் முன்னேற்றத்துக்கு உதவுவதிலும் , மீள்திறனை வளர்ப்பதற்கு உதவுவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த பிரிவுகளுக்கு தொழில் முன்னேற்றம், நிதி பாதுகாப்பு, மனநலன்,தனிப்பட்ட நலன் முதலிய தேவைகளும் உள்ளது.

அதோடு அதிகமான பெண்கள் வேலைகளுக்கு திரும்ப உதவுவதற்கு மேலும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை வழங்குவதற்கு இது முதலாளிகளை ஊக்குவிக்கிறது.