தேர்தல் தினம் பொது விடுமுறை!! நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!!

தேர்தல் தினம் பொது விடுமுறை!! நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!!

சிங்கப்பூரில் மே 3 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தகவலை தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் வேட்புமனு தாக்கல் தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தல் நடைபெறும் தினத்தன்று பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் அன்றைய தினம் தங்களது ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக மனிதவள அமைச்சகம் ஏப்ரல் 15 ஆம் தேதி(நேற்று) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுப்பு அல்லது அதற்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்று அது கூறியது.

நிறுவனங்கள் மற்ற பொது விடுமுறை நாட்களில் பின்பற்றும் விதிகள் தேர்தல் நாளுக்கும் பொருந்தும் என்று அமைச்சகம் நினைவூட்டியது.

அனைத்து ஊழியர்களுக்கும் வேலைச் சட்டத்தின்கீழ் பொது விடுமுறை நாளில் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan

Exit mobile version