பண்ணையில் செம்மறி ஆட்டுக்கடா தாக்கி இறந்து கிடந்த வயதான தம்பதியினர்!!சுட்டு கொல்லப்பட்ட செம்மறி ஆட்டுக்கடா!!​

பண்ணையில் செம்மறி ஆட்டுக்கடா தாக்கி இறந்து கிடந்த வயதான தம்பதியினர்!!சுட்டு கொல்லப்பட்ட செம்மறி ஆட்டுக்கடா!!

நியூசிலாந்தில், பண்ணையில் வயதான தம்பதியின் மரணத்திற்கு காரணமானதாக சந்தேகிக்கப்படும் செம்மறி ஆட்டுக்கடாவை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

மேற்கு ஆக்லாந்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி 80 வயதுடைய தம்பதியினர் இறந்து கிடந்தனர்.

இது ஒரு சோகமான விபத்து என்று தம்பதியின் மருமகன் கூறினார்.

மற்றொரு நபரும் செம்மறி ஆட்டுக்கடாவால் காயமடைந்தார்.ஆனால் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தன.செம்மறி ஆட்டுக்கடா ஆக்ரோஷமாக செயல்பட்டதால், சுட வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .