கடுமையான புயலின் எதிரொலி!! வெள்ளத்தில் மிதக்கும் பகுதிகள்!!

கடுமையான புயலின் எதிரொலி!! வெள்ளத்தில் மிதக்கும் பகுதிகள்!!

ஜனவரி 7ஆம் தேதி அன்று தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் கடுமையான புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 8ஆம் தேதி அதிகாலையில் வெள்ளத்தில் சிக்கிய 26 பேரை மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.

மேலும் 700 பேரிடமிருந்து உதவிக்காக அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.