தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம்….. கடலில் எழுந்த சுனாமி அலைகள்….

பசிபிக் பெருங்கடலில் உள்ள Izu தீவுகளில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஜப்பான் சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

எழுந்த சுனாமி அலைகளால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கையை நீக்கியதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

Shimoda-வில் இருந்து 551 கிலோமீட்டர் தெற்கே 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

Hachijojima தீவை 60 சென்டிமீட்டர் அளவிலான சுனாமி அலைகள் தாக்கியது என்று தெரிவிக்கப்பட்டது.

அதே சமயத்தில் மேற்கு கொச்சி மற்றும் தெற்கு Miyazaki மாகாணங்களில் முறையே, 40 சென்டிமீட்டர் மற்றும் 20 சென்டிமீட்டர் அலைகள் பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தது.