சீனாவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! 116 பேர் பலி!! பலி எண்ணிக்கை உயருமா?

வடமேற்கு சீனாவில் டிசம்பர் 18ஆம் தேதி அன்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 500 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பல இடிந்து விழுந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சுமார் 1400-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர்கள் கூறினர்.