ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயர்ந்த நிலையில் மேலும் இருவரை காணவில்லை!!

டிசம்பர் 18ஆம் தேதி அன்று சீனாவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரமான நிலையில் இன்னும் இரண்டு பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 781 பேர் காயமடைந்துள்ளனர் என்று அவர்கள் கூறினர்.

இந்த நிலநடுக்கத்தில் 200,000க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்தன.மேலும் 15,000 வீடுகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.சுமார் 1,45,000 மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.