Latest Tamil News Online

தங்கும் விடுதியில் வசிக்காத ஊழியர்களுக்கு மின்னியல் முறையில் சம்பளம் எதிர்காலத்தில் விரிவுப்படுத்த படும்!

நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கும் விடுதியில் வசிக்காமல் வேலை அனுமதி அட்டை வைத்து இருக்கும் ஊழியர்களில் எத்தனைப் பேர் மின்னியல் முறையில் சம்பளம் வாங்குகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் Louis Ng Kok Kwang கேள்வி எழுப்பினார்.

இது குறித்த விவரம் ஏதும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக இரண்டாம் வர்த்தக, தொழில் அமைச்சர் Tan See Leng பதில் அளித்தார்.

தங்கும் விடுதியில் இருக்கும் ஊழியர்களுக்கு மின்னியல் முறையில் சம்பளம் அளிப்பதற்கு மனிதவள அமைச்சகம் முன்னுரிமை அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தங்கும் விடுதியில் வசிக்காத ஊழியர்களுக்கும் மின்னியல் முறையில் சம்பளம் வழங்குவதை எதிர்காலத்தில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து மனிதவள அமைச்சகம் முத்தரப்பு பங்காளிகளுடன் தொடர்ந்து கலந்து பேசுவார்கள் என்றும் கூறினார்.